பிரபா அண்ணாவுக்கு ஜென்சி அக்காவை ரொம்ப பிடித்திருந்ததால், அக்காவுக்கும் அண்ணாவை ரொம்ப பிடித்திருந்ததால், கல்யாணத்தின் முதல் நாள் இரவு அக்கா காணாமல் போய் விடுவாள் என்று அம்மாவும் அத்தைகளும் சித்தியும் அவளின் அறையிலேயே காவலர்களாய் மாறிப் போயிருந்தனர்.. இரவெல்லாம் கேட்டு கொண்டே இருந்த அந்த அக்காவின் அழுகையின் இடையே உறங்கி போனேன் நான் புரியாத வயதில்.. இப்போதெல்லாம் உறக்கமின்றி எனக்காக அழும் இரவுகளில், அக்காவுக்கும் சேர்த்தே அழுகிறேன்!!