சொந்தமாய் ஒரு வீடு என்பதெல்லாம் பெரும்பான்மையானோரின் பேராசைக் கனவாகிப் போயிருக்கையில், ஒருவேளை கனவுகள் தாண்டி கற்கள் கொண்டும் வீடு கட்டுவதாக இருந்தால் தயவுசெய்து பெரியதொரு ஜன்னல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.. உங்கள் கேசம் கலைத்துப் போட்டு விளையாட காற்றோட்டம் அங்கிருக்கும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.. உங்களுக்கென ஒரு ஜன்னலோரம் இருப்பின் உலகின் எந்தவொரு துயரையும் நீங்கள் கடந்துவிடலாம் அல்லது மறந்துவிடலாம் என்பதற்கு, தாய் மடியென அதன் கம்பிகளில் தலை சாய்த்து தன்னைத் தொலைத்தோர் ஏராளம் சாட்சியுண்டு.. ஒரே ஒரு நிபந்தனை, அந்த ஜன்னலை சாத்திவிட்டு மீண்டும் திறப்பதற்கு முன் மனம் விட்டு அழுதிருப்பது மட்டும் முக்கியம்!!