முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அவள்‌ பெயர் ராணி!!

துக்கமணி ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருக்கிறது தேவாலயத்தில்.. கேட்க நாதியற்று இறந்து போன அவள் பெயர் ராணி.. பிச்சைகாரியாய் ரோட்டோரம் செத்து கிடந்தாள்.. காசு கொடுத்தும் கொடுக்காமல் ஏமாற்றியும் அவளை புணர்ந்தவர்கள் யாரையும் காணோம் அங்கு.. முதல் முறை ஓர் இரவு நிம்மதியாய்‌ உறங்குகிறாள்‌ அவள்.. முதல் முறையாய் ஓர் இரவு அழாமல் கடக்கிறது அவளுக்கு, அதோ அடைமழை விடாது பெய்து‌ அழுது தீர்த்துக் கொண்டிருந்தது அவளுக்கும்‌ சேர்த்து.. கண்டும்‌ காணாததை போல் சென்றவர்களில் யாரோ கண்ணியமானவர்கள் நான்கு பேர் தூக்கி செல்கிறார்கள் அவளை..  இதோ கடைசி யாத்திரைக்கு போகிறாள் அவள் பல்லக்கு பாடையில் ஒரு ராணியை போல!!

அந்த காலத்து School Love♥️

ஐந்தாறு மாதங்கள் போராடி அடித்து பிடித்து எப்படியோ Attendance register-இல் இருந்து அவள் தொலைப்பேசி எண்ணை தேடிக் கண்டுபிடித்து எடுத்து, 'எப்ப call பண்ணிணா அவ எடுப்பா, அவள் குரல் கேட்டாலே போதும்' என எண்ணியபடி, அலைபேசியில் அந்த எண்களை அழுத்தும் போது மனதில் எழும் அந்த என்னவென்றே தெரியாத உணர்வு சங்கமம் தான் அப்போதைய பள்ளிக் காதலின் இலக்கணம்!

எரிகிறது என் ஆன்மா!!

இந்த பின் அந்தி இரவுகளில் உன் நினைவுகளை போர்த்தியபடி நான்‌ மட்டும் கிடக்கிறேன்‌ இங்கே.. நீ இட்டு போன ஒவ்வொரு முத்தத்தின் உஷ்ணத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது என் ஆன்மா!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!

என் சரியான தவறு நீ!!

என் தவறுகளில் மிக சரியானதுமாய் மிக பிடித்தமானதுமாய் நீ மட்டுமே இருக்கிறாய் எப்போதும்!!

காரணம் கூட தெரியாமல் தொலைஞ்சு போறதோட வலி💔

தொலைத்தவர்கள் வேண்டுமானால் தேடாமல் இருக்கலாம்.. ஆனால் தொலைந்த ஒவ்வொருவருமே தேடிக் கொண்டேதான் இருக்கின்றனர் இன்னமும் தாங்கள் தொலைக்கப் பட்டதற்கான காரணத்தை!!

பறவை மீது பொறாமை எனக்கு!!

காற்றின் திசையை முன்கூட்டியே அவதானித்து இறக்கைகள் இரண்டையும் அகல விரித்து இன்பமாய் பறக்கத் தயாராகும் ஒரு பறவையைப் பார்த்து பொறாமைப் படுவதைத் தவிர, இத்தனை வருட இந்த மானுட வாழ்வில் இந்த ஆறாம் அறிவைக் கொண்டு பெரிதாக நான் எதையும் செய்ததில்லை, செய்ததாக நினைவுமில்லை.. அதோ அந்தப் பறவை எவ்வளவு உயரத்தில் மிதந்துகொண்டே பறக்கிறது பாருங்களேன்!!