முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவுகள் மட்டும் நகராமல் !!

பார்த்தாயா இந்தக் காலம் தான் எவ்வளவு வேகமாய் நகர்கிறது, அதுவும் நம்மை இழுத்துக்கொண்டே.. நெற்றி சறியும் நரைமுடி ஒதுக்கும் காலத்திற்கு வந்துவிட்டாய் நீ.. கண்ணாடியின்றி பொடி எழுத்துக்களை தடவத் தொடங்கி விட்டேன் நான்.. ஆனாலும் பாரேன், நினைவோடையில் மிதக்கும் அந்த காட்சி மட்டும் இன்னும் இளமை ததும்ப அப்படியே நிற்கிறது.. அதில் எப்போதும் ஒருவன் இன்னமும் தரை தேய bell bottom அணிந்து கொண்டு ஒய்யாரமாக நிற்கிறான்.. அவனைக் கண்டும் காணாதது போலவே அந்த ஒருத்தி எப்போதும் தரையோடு விரல் தேய, தலைமயிர் கோதியபடி நிற்கிறாள் !!

இதற்காகத்தான் !!

  சிறுவயதில் வன்புணரப் பட்ட பெண் அவள்.. யாரோடும் இயல்பாய் ஒட்டாது, எந்நேரமும் ஏதோ ஒன்றினை தூக்கி சுமந்தபடியே திரியும் அவள் எளிதில் பேர் வாங்கி விட்டாள் introvert என்றும் எக்கச்சக்க திமிர் பிடித்தவள் என்றும்..‌ இருவரும் பழக வேண்டிய சூழ்நிலை வந்த போதும், அது எந்த பேச்சாயினும் எட்டடி தூரம் தள்ளி நின்று தான் என சொல்லாமலே புரிய வைத்து விட்டாள் எனக்கு.. பழகத் தொடங்கி பல மாதங்களுக்கு பிறகு, எதேச்சையாக தனியாய் இருந்த சூழலில் கேட்டேன், 'ஏதும் பிரச்சனை இருக்கா உனக்கு, சொல்லு என்னால முடிஞ்சதுனா எதாவது பண்றன்' அப்படி சொன்னதும், அடைச்சு வச்ச அணைகள திறந்து விட்ட மாதிரி அவ்ளோ அழுகை.. 'என்னால யாரையும் நம்ப முடியவில்லை. யாரோடும் ஒன்ற முடியவில்லை. உங்கள் அருகில் இருந்துகொள்ளட்டுமா' அப்படினு குரல் ஒடைஞ்சு தேம்பிக் கொண்டே கேட்டாள்.. ச்சீ ஏன்டி பைத்தியமே இதுக்கு போய் இவ்ளோ கலங்குற. இங்கே வா. என்று அருகில் அணைத்து அவள் கரங்கள் எடுத்து என் உள்ளங்கையில் வைத்து அடைத்துக் கொள்கையில், என்னைக் காதலிப்பீர்களா? என்றாள், அவ்வளவு ஏக்கம் அந்த குரலில்.. ம்ம்ம் காதலிக்கிறேனே என்றதும் தாயைக் கண்ட குழந்தை ...

எனக்கான விண்மீன் அவள் !!

  நெடுங்காலமாய் யாரும் புழங்காத என் அறையினுள் நீ வந்து விழுந்தாய் விண்மீனாய்.. எனக்கே என்னை அடையாளம் தெரியாத இந்த இருட்டில், என்னை என்னிடமே பிரதிபலித்துக் காட்டுபவள் நீ !!

இந்த கடிதம் உனக்கானது !

உனக்கான அன்பின் ஒரு சொல்லை இதயத்தின் அடியாழத்திலிருந்து எடுத்து பிய்த்து வைத்தாலன்றி உனக்கான இந்த கடிதம் நிறைவுறாது.. குடித்துத் தீரா அந்தக் கடலை பாட்டில் ஒன்றில் அடைத்து வைக்கப் பார்க்கிறேன் நான்.. மேலும், முற்றுப்புள்ளியிட வேண்டிய இடங்களில் எல்லாம் என் கண்ணீர்த்துளி ஒன்றினை நீந்த விடுகிறேன் !!

யாரோ உடன் இருக்கிறார்கள் என்பது தான் எத்தனை ஆறுதல் !!

எப்போதுமே நமக்காய் நாம் மட்டுமே இருக்கிறோம் என்பது தான் எத்தனை கசப்பாய்யிருக்கிறது இப்போதெல்லாம்.. யாரோ உடன் இருக்கிறார்கள் என்பது எத்தனை ஆறுதல்.. விரல்கள் நீட்டி தொட்டுக் கொள்ளவும், கரங்கள் நீட்டி பற்றிக் கொள்ளவும் உறவென்று எதுவும் இல்லாமல் போகையில், இந்த வாழ்க்கை துயரம் மிகுந்ததாய் நீண்டு கொண்டே போகிறது !!

இவர்களாவது !!

நீயும் நானும் கைகள் பிணைத்துக் கொண்டு தோள் சாய்த்து அமர்ந்திருந்த அந்தத் தெருவோரத்து பூங்காவின் மரத்தடியில் இன்று அவ்வாறே அமர்ந்திருக்கின்றனர் வேறு யாரோ இருவர்..  இதழோரம் புன்னகையோடும், மனதில் சிறு வேண்டுதலோடும் கடந்து போகிறேன், இவர்களாவது தொடர்ந்து இங்கு அமரட்டும் !!

இத்தனை எளிது இந்த வாழ்க்கை !!

இந்தியோ சமஸ்கிருதமோ இன்னும் வேறேதோ, எனக்கு வேண்டின் நான் அறிந்து கொள்கிறேன்.. புல்லோ, புலாலோ புசிப்பது எதுவாயினும் என் நா விரும்புவதை நான் உண்டு கொள்கிறேன்.. கறுப்போ, காவியோ கண் காணா கடவுள் வேறாருமோ, எனக்கு நம்பிக்கை இருப்பதை நான் தரித்துக்கொள்கிறேன்.. இவ்வளவு எளிது, இத்தனை எளியது தான் இந்த வாழ்க்கை.. உள்ளது எதுவும் உனக்கு வெறுப்பாகின், நீ வாழ விழையாதிருப்பின் செத்தொழி.. நான் கொண்டாடித் தீர்த்துக் கொள்கிறேன், உன் காலத்தையும் சேர்த்து !!