யோசித்துப் பார்க்கிறேன்.. மொத்தமும் கொட்டிப் போய் உனக்கே உனக்காகவெனவே மிஞ்சியிருந்த அந்த ஒற்றைப் பூவை, சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, பாதங்கள் ஒருசேர உயர்த்தி எட்டிப்பறிக்க நீ எத்தனித்த அத்தருணத்தை அருகாமையில் நின்று தரிசித்த அந்த நேரத்தில் தான், நிச்சயம் நான் கவிஞனாகியிருக்க வேண்டும்!!